WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

Hamm Ambl Kovil

Oberster Priester

Siva Sri Arumugam Paskarakurukkal 

Kontakt

Hinduistische Gemeinde in Deutschland, K.d.ö.R.
Siegenbeckstr. 4-5
59071 Hamm

Telefon: +49 (0) 2388-30 22 23
Telefax: +49 (0) 2388-30 22 24

E-Mail: info@hinduistische-gemeinde-deutschland.de


Öffnungszeiten/திறக்கும் நேரம்/opening times

Täglich/தினசரி/daily8:00 – 14:00  | 17:00 – 20:00 Gottesdienst Täglich/பூஜை தினசரி /Worship daily

8:00 | 12:00 | 18:00 

............................................................................................................................................................................................................

Hamm Hindu Shankarar 
Sri Kamadchi Ampal Tempel

அம்பிகை அடியார்களே!
 ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் 2021 
தேர்த்திருவிழா 11.7.2021 திகதியில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
யேர்மனி ஹம் காமாட்சிஅம்பாள் ஆலயதில் கலாச்சார மையம்  அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது   3 மில்லியன் ஈரோ செலவில் அமைக்கப்படுகிறது.

இத்திருப்பணி 04.1.2021 இலிருந்து  ஆரம்பவேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இது பற்றி ஆலய ஆதியினகர்த்தா சிவசிறி பாஸ்கரக்குருக்கள் அவர்களின் அடியவர்களுக்கான அறிக்கை.

அம்பிகை அடியார்களே!

ஹிந்து சங்கரர் சிறி காமாட்சி அம்பாள் ஆலயம் மத்திய ஐரோப்பிய நாடான ஜேர்மனியில் அமைந்துள்ள மிகப் பெரிய இந்து ஆலயமாகும். இவ் ஆலயமானது ஆலயப் பணிகளுடன் பல பொதுப்பணிகளையும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் செய்து வருகிறது.

அந்த வரிசையில் எமது பாரம்பரிய கலை பண்பாட்டு காலாச்சார விழுமியங்களை எதிர்காலச் சந்ததியினரின் கலாச்சாரப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிறி காமாட்சி அம்பாள் ஆலயமானது மிகப் பெரிய கலாச்சார மண்டபம் ஒன்றை அமைக்கத் தீர்மானித்துள்ளது. அதில் நூலகம், அருங்காட்சியகம் (எமது மூதாதையர்கள் பாவித்த பொருடகள் மற்றும் பல பழமை வாய்ந்த அரும் பொருட்கள்), இந்து மாநாடு போன்ற சத்சங்கம் நடைபெறுவதற்கான மண்டபம், யோகாப் பயிற்சியகம், பரதம்,சங்கீதம், வாத்தியங்கள் போன்ற கலைகளைக் கற்றுக் கொடுப்பதற்கான பாடசாலை, மற்றும் பல கலை அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த கலாசார மையம் அமையவுள்ளது.

இந்தப் பணியின் முதற்கட்டமாக கலாச்சார மையம் அமைப்பதற்கான காணியை பக்தர்களின் ஆதரவுடனும் வங்கிக் கடனுதவி மூலமாகவும் வாங்கியுள்ளோம். இருப்பினும் கட்டிடம் அமைப்பதற்கான பணியில் ஈடுபட தற்போது நிலமை உருவாகியுள்ளது  வங்கியில் மீண்டும் கடனுதவி பெற்று. வங்கியில் கடனுதவியால்  கட்டிடப் பணியை  ஆரம்பிக்கபட்டு வருகிறது.

எனவே அன்னை அடியவர்கள் அனைவரும் இதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் எமது கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பதற்கு இக் கலாச்சார மையம் அமைய வேண்டியதன் முக்கியத்தை உணர்ந்து உங்களால் முடிந்த நிதியுதவியைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இத் திருப்பணிக்கு நீங்கள் உதவக் கூடிய வழிகள்

1. நீங்கள் விரும்பிய தொகையை நன்கொடையாகச் செலுத்தலாம் (மீள்வரி ரசீது வழங்கப்படும்)

2. வட்டியற்ற கடனுதவி செய்யலாம் (5வருடங்களில் திருப்பி செலுத்தப்படும்)

நீங்கள் நன்கொடை செய்ய விரும்புகிறீர்களா? மேலதிக விபரம் வேண்டுமா?

நிச்சயமாக: தயவுசெய்து எமக்கு உங்கள் கேள்வி, கருத்துக்களை எழுதி அனுப்புங்கள்.


ஆலய ஆதியினகர்த்தா.


யேர்மனி ஹம் காமாட்சிஅம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் 7.9.2020 முற்றிலும் புதிய நடைமுறைகளுடன் இவ்வருடம் திருவிழா.

2020 ம் ஆண்டு ஆலய திருவிழாவுக்காக  கொரோனா கால புதிய நடைமுறைகள் பற்றிய கலந்துரையாடல் ஆலய வளாகத்தில் 30.8.2020 நடைபெற்றது.  இக்கலந்துரையாடல் ஆலய பிரதம குரு சிவசிறி பாஸ்கரக்குருக்கள் தலமையில் நடைபெற்றது. ஆலய குருமார்கள்,அறங்காவல் தொண்டர்கள்,சற்சங்க உறுப்பினர்கள்,செய்தியாளர்கள் என அழைக்கப்பட்டனர். இதில் பண்ணாகம்.கொம் இணையமும் கலந்து கொண்டது. வழமையாக 6ம் மாதம் நடைபெற இருந்த திருவிழா கொரோனா இடரால் தடைப்பட்டு 7.9.2020 க்கு பிற்போடப்பட்டபோதும் கொரோனா கட்டுப்பாடுகள் அரசால் தளர்த்தப்படவில்லை அதனால் திருவிழா வழமைபோல மிக விமர்சையாக நடாத்த முடியவில்லை. இருந்தும் ஆலயகுருக்களின் முயற்சியினால்  கம் நகரசபை  சில கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி வழங்கியுள்ளது. அந்தவகையில் 

யேர்மனி ஹம் காமாட்சிஅம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் 
2020 ம் ஆண்டு புதிய திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது 
07.09.2020 கொடியேற்றத்துடன்  ஆரம்பம்.    20.9.2020 தேர்த்திருவிழா.

(திருவிழாக் காலங்களில் உங்கள் நேர்த்திக்கடன்களான கற்பபூரச்சட்டி, பாற்செம்பு, காவடி, அர்ச்சனை ,பிரதட்சை போன்றவற்றை எல்லாத் திருவிழா நாட்களிலும் செய்வதற்கான விசேட ஒழுங்குகள் உள்ளது. மேலதீக விபரங்கள் அறிய ஆலயத்துடன் தொடர்புகொள்ளவும்.)

07.09.2020 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் திருவிழாவில் குருமார் தொண்டர்கள் உட்பட 150  பேர் பங்குபெற்றலாம்  இதற்காக ஆலயத்தால் ஒரு இணைய செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது.  அதில் முற்பதிவுகளை மேற்கொண்டு ஆலயத்திற்கு முகக்கவசம் அணிந்து செல்லலாம்.  இந்த நடைமுறை கொடியேற்றம்,சப்பறம், 20.9.2020 தேர்த்திருவிழாக்களில் இறுக்கமாக கடைப்பிடிக்கப்படும். மற்றும் தேர்த்திருவிழாவில் உங்கள் வாகனங்களில் நீங்கள் இலகுவாக தேர்முன்பாக தேருக்கு மிக அருகில் வந்து வாகனத்தில் இருந்தபடி அர்ச்சனை செய்து நேரடித் தர்சனம் செய்யலாம். இதற்காக  கடைகள் நடைபெறும் இடத்து முற்றத்தில் கிருஷ்ணர் ஆலயம் முன்பாக தேர் மதியம் 12.00 மணி முதல் மாலை 17.00 மணிவரை பக்தர்கள் தர்சனத்திற்காக விசேட தேர் தரித்து நிற்க  ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக ஆலய  இணையத்தளத்தில் விசேட பதிவு நீங்கள் செய்யவேண்டும் அதில் உங்கள் வாகன இலக்கம்,உங்கள் பெயர்,முகவரி, உங்கள் நேர்த்திக்கடன்,அர்ச்சனை விபரம் என்பன பதியப்படவேண்டும். நீங்கள் ஆலய வளாகம் தேரடி வரை வர இந்த ஒழுங்கு மிகமிக முக்கியமாகிறது. வாகனத்திலிருந்து நீங்கள் இறங்கும் வாய்ப்பு இல்லை உங்களுக்கான வாகனத்தில் வருபவர்கள் எண்ணிக்கை அளவிற்கு தாகசாந்தி, அன்னதானம் பொதிசெய்து  வெளியேறும் வாசலில் உடனடியாக வழங்கப்படும். இவ்வருடம் உடல் வலுவற்றவர்கள்,நடக்கமுடியாதவர்களு எந்த விதசனநெரிசலும் இல்லாமல் தேரின் மிகமிக அருகில் உங்கள் வாகனத்தில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. 

குறிப்பு . ஆலயத் தகவல்கள் அறிய ஆலத்துடன் நீங்கள் எப்போதும் தொடர்பு கொள்ளலாம்.  வதந்திகளை நம்பவேண்டாம். 
(ஆலய ஆதியினகர்த்தா)

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யேர்மனி ஹம் காமாட்சிஅம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் 
2020 ம் ஆண்டு புதிய திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என ஆலய ஆதியினகர்த்தா அறிவித்துள்ளார். 

07.09.2020 கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பம்.

20.9.2020 தேர்த்திருவிழா

யேர்மனி ஹம் காமாட்சிஅம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் யூன் மாதம் 24.06.2019 கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பம்.

7.7.2019 தேர்த்திருவிழா

14.04.2017 ஹேவிளம்பி புதுவருடப்பிறப்பு விசேட பூஜை

எதிர்வரும் 14.04.2017 அன்று ஹேவிளம்பி புதுவருடப்பிறப்பை முன்னிட்டு ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயத்தில் அம்பாளுக்கு 1008 சங்காபிஷேகம் மற்றும் விசேட நவாவரண பூஜையும் அன்னை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் துணையோடு நடைபெறவுள்ளது. இந்த விசேட புண்ணிய நாளில் பக்தர்கள் அனைவரும் ஆசார சீலர்களாக வருகை தந்து அம்பாளின் அருளால் ஜாதக மற்றும் கிரக தோஷங்கள் நீங்கப் பெற்று சகல வளங்களும் பெற்று பேரானந்த வாழ்வு பெற்று வாழ வாழ்த்தி ஆசீர்வதிக்கிறோம். 

ஆலயகுரு

ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயத்தில் 13.10.2015 தொடக்கம் 22.10.2015 வரை நவராத்திரி விழா நடைபெறும்.

ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயத்தில் 13.10.2015 தொடக்கம் 22.10.2015 வரை நவராத்திரி விழா மிக சிறப்பாக நடைபெற அன்னை ஸ்ரீ காமாக்ஷி அம்பாளின் அருள் கிடைக்கப் பெற்றுள்ளது. ,இந்த விசேட நாட்களில் பக்த்தர்கள் அனைவரும் ஆசார சீலர்களாக வருகைதந்து துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களின் அருளை பெற்றுசெல்லும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

22.10.2015 விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு ஏடு தொடக்கும் வைபவம் நடைபெறும்.

சென்ற வருட நவராத்திரிவிழா ஒளி நாடா பார்க்க இங்கே அழுத்தவும்.


ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 23.06.2014 தொடக்கம் 09.07.2014 வரை நடைபெறும்.

 

  நிகழும் ஜய வருஷம் ஆனித்திங்கள் 9ம் நாள் 23.06.2014 திங்கள்கிழமை தொடக்கம் 09.07.2014 புதன்கிழமை வரைக்கும் ஜேர்மன் நாட்டில் ஹம் மாநகரில் வீற்றிருக்கும் காமேஸ்வரரை பதியாக கொண்டுள்ள ஸ்ரீ காமாக்ஷி அம்பாளுக்கு மகோற்சவம் நடைபெற அம்பாளின் அருளும் குருவின் ஆசியும் கிடைத்துள்ளது.

 

   இவ் விழாக்காலங்களில் அனுதினமும் காலை 7.00 மணிக்கு ஸ்நபன அபிஷேகமும் 10.00 மணியளவில் மூலஸ்தான பூஜையும் 11.00 மணிக்கு கொடிதம்ப பூஜையும் அதனைத் தொடர்ந்து 12.00 மணிக்கு வசந்த மண்டப பூஜையும் நடைபெற்று அம்பாள் உள்வீதி உலா வருவா. மதியம் 1.30 மணியளவில் அடியவர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கி, திருமடத்தில் அன்னதானமும் வழங்கப்படும்.

 

  மாலை 4.00 மணிக்கு மூலஸ்தான விஷேட பூஜையும் மாலை 5.15 மணியளவில் கொடிதம்ப பூஜையும் மாலை 6.00 மணிக்கு வசந்த மண்டப பூஜையுடன் காமாக்ஷி அம்பாளுக்கு மந்திர புஷ்பா பாராயணம், வேத பாராயணம், கண பாராயணம், ஸ்தோத்திர பாராயணம், தேவார பாராயணம், இவையனைத்தும் நிகழ்வு பெற்று, சர்வ வாத்திய பிரியையான சர்வாம்பிகை உலகை காக்கும் பொருட்டு மாலை 7.00 மணியளவில் உள்வீதி உலா வருதலுடன் யாக தரிசனமும் நிகழ்வு பெற்று , தொடர்ந்து வெளி வீதிஉலா வருதலும் நிகழ்வுபெற்று, இரவு 8.30 மணியளவில் அடியவர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்படும். இவ் வேளையில் அனைவரும் ஆசார சீலர்களாக வருகை தந்து அம்பாளை வழிபட்டு அனைத்துச் செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழ்வீர்களாக! 

 

இவ்வண்ணம் 

ஆலயகுரு 

 

திருவிழா பத்திரிகையை பார்க்க இங்கே அழுத்தவும்....

மூலவர் விக்கிரகங்கள் புணரமைப்பக்காக மீளப்பெறும் வைபவம்

04.05.2014இல் ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலய புணருத்தாரண கும்பாபிசேகம் நடைபெறும்


கும்பாபிசேக மகோற்சவ  திகதி விபரங்கள்


27.04.2014    ஞாயிறு       கிரிகை ஆரம்பம் 
02.05.2014    வெள்ளி     யாக ஆரம்பம் 
03.05.2014    சனி            எண்ணைக்காப்பு 
04.05.2014    ஞாயிறு      கும்பாபிசேகம் 
05.05.2014    திங்கள்        மண்டலாபிசேகம் ஆரம்பம் 
22.06.2014    ஞாயிறு      மண்டலாபிசேக பூர்த்தி 
06.07.2014    ஞாயிறு      தேர் உற்சவம்

 

ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலய கும்பாபிசேகம் நடைபெற்று 12வது ஆண்டை நெருங்கி கொண்டிருகிறது 07.07.2002ஆம் ஆண்டு கும்பாபிசேகம் செய்யபட்டது நீங்கள் அனைவரும் அறிந்ததே. ஆகம விதிமுறைகளின் படி 12 வருடங்களுக்கு ஒரு முறை மீள் கும்பாபிசேகம் செய்யப்பட வேண்டும். அதன் படி 2013ஆம் ஆண்டு உற்சவம் முடிந்தவுடன் தொடர்ந்து பாலாலயம் செய்யப்பட்டு ஒரு வருட காலத்துக்குள் சில சீர்திருத்த வேலைகள் நிறைவு செய்யப்பட்டு 2014ஆம் ஆண்டு முற்பகுதியில் கும்பாபிசேகம் செய்ய தீர்மானித்துள்ளோம். பக்தர்கள் அனைவரும் கும்பாபிசேக  விழாவிலும், மண்டலாபிசேக விழாக்களிலும், மேலும் நடைபெற இருக்கும் திருப்பணிகளிலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

ஆலயத்தில் சில முக்கிய திருப்பணிகள் செய்யவேண்டி இருகின்றன. ஆலய தெற்குவாசல், வடக்குவாசல், மேற்க்குவாசல்  கதவுகள் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. கொடிமரத்தின் மேல் உள்ள நான்கு யன்னல்களும், மற்றும் உள்ளே இருக்கும் சன்னிதானங்களில் சிறு திருத்த வேலைகளுடன், ஒவ்வொரு சன்னிதானங்களின் கதவுகளும் சிற்ப வேலைகளுடன் கூடியதாக புதிதாக போடத் தீர்மானிக்க பட்டுள்ளது.முன் நுழை வாயில் ராஜாகோபுர கதவுகளும் திருத்த வேலைகள் செய்யப்பட வேண்டி உள்ளதுடன் வெளிமதில் சுவர் சிறப்ப வேலைகளும் செய்யவேண்டி உள்ளன.

 

ராஜாகோபுரம் , ராஜவிமானம் ஆகியவை ஜேர்மன் நாட்டு சீதோஷ நிலைமைகளால் சில உடைவுகளுக்கு உட்பட்டுள்ளன இவை யாவும் கட்டாயம் சீர்திருத்த வேலைகள் செய்யப்பட வேண்டி இருப்பதால் இவை யாவும் செய்வதற்கு சுமார் 250,000.00 யூரோ(இரண்டரை லக்ஷம் ) தேவையென கணக்கிடப்பட்டுள்ளது. வேண்டுவோருக்கு வேண்டும் வரமருளும் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் அடியார்களாகிய நீங்கள் இத் திருபநிகளுக்கு நிதிஉதவி தருவதுடன் ஆலய திருப்பணிகளில் சிலவற்றை நீங்களே பொறுப்பெடுத்து  செய்து பணிகளை துரிதமாக நிறைவேற்ற உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

மேலும் ஆலயத்தில் சிற்ப வேலைகள் செய்வதற்காக தென் இந்தியாவில் இருந்து சிட்பாசிரியர்களை மீண்டும் வரவழைக்க வேண்டிய கட்டாயமும் இருப்பதால் அவர்கள் இங்கு ஆறு மாத காலம் தங்கி சிற்ப வேலைகளை பூர்த்தி செய்ய வேண்டி உள்ளன. அடியார்களாகிய உங்களின் ஒத்துழைப்புடனும் எமது விடா முயற்சியாலும் பல சிரமங்களின் மத்தியிலும் இந்த ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. நாம் அனைவரும் சேர்ந்து அம்பாளின் இந்த புனருத்தாரண  கும்பாபிசேகமும் மிக சிறப்பாக நடைபெற அன்னைக்கு  திருப்பணிகள் செய்வோமாக!

 

ஆலயம்

ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம் (நோற்ரையின் வெஸற்பாலன்) ஹம் நகரில் அமைந்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு 7ம் மாதம் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்ற இவ் ஆலயம் ஐரோப்பிய நாடுகளில் ஆகம விதி நெறிப்படி அமைக்கப்பட் ராஜகோபுரத்துடன் மற்றும் விமாணத்துடன் கூடிய பெரிய ஆலயமாகும்.

 

தினம்தோறும் மூன்றுகாலப் பூசைகள் நடைபெற்று வரும் காமாட்சி அம்பாள் ஆலயத்தில், வருடாந்த மஹோற்சவ காலத்தில் அன்னை காமாட்சி அம்பாள் ரதத்தில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருள் மழை பொழியும் பொருட்டு வீதியுலா வரும் வேளையில் சுமார் 25.000க்கு மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து அன்னையின் அருளெனும் மழையில் நனைகின்றனர். இவர்களில் 20.000 மேற்பட்டவர்கள் வெளிநாடுகளிலிருந்து அன்னையின் உற்சவத்தை கண்டுகழிப்பதற்காக வருகை தந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

கிட்டத்தட்ட 1,5 தொடக்கம் 1,7 மில்லியன் யூரோவை பக்தர்களின் நன்கொடை, வங்கி கடன் உதவி இவற்றின் மூலமாகப் பெற்று, ஹம் நகரில் வசிக்கும் கட்டிடநிபுணர் திரு. ஹயின்ஸ் ரைனர் ஹைஸ்கோஸ்ற் என்பவரின் கட்டிட கட்டுமானப் பணியுடனும், இந்திய சிற்பக் கலைஞர்களின் சிற்பச் சிறப்பாற்றலுடனும் சுமார்  (27*27) 729 மீற்றர் சதுரப்பரப்பில் ஆலயம் ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது.

 

அன்னை காமாக்ஷி அம்பாள் தன்னை நாடி வரும் அடியார்களை தன் அன்புப்பார்வையால் அருள்கோடி அள்ளி வழங்குகிறாள். காமாட்சி எனும் சமஸ்கிருத சொல்லின் பொருள்- அன்புடன் பார்க்கும் கண் என்பதாகும். அன்னையானவள் தன் குழந்தையை எப்படி பார்ப்பாளோ அதே போல அண்டசராசரங்களையும் படைத்து, காத்து, ரட்சித்து வரும் அன்னை காமாட்சியும் தன் குழந்தைகளான எம்மை தனது அன்புப் பார்வையால் முத்திப் பாதைக்கு இட்டுச் செல்கிறாள்.

 

அன்னையின் அருள்பெற உங்கள் அனைவரையும் காமாட்சி அம்பாள் ஆலயம் அன்புடன் வரவேற்கிறது!